குரூப் 4 மாதிரி தேர்வினை ஆன்லைனில் எழுதலாம்: மாவட்ட ஆட்சியர்

டி.என்.பி.எஸ்.சி குரூப்–4 மாதிரி தேர்வினை ஆன்லைனில் எழுதலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.;

Update: 2024-02-03 14:17 GMT

மாவட்ட ஆட்சியர் 

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வெவ்வேறு பணியிடத்திற்கு 6,244 பணி காலியிடங்களுக்கு 09.06.2024 அன்று நடத்தப்பட உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 (TNPSC GROUP IV) தேர்விற்கு www.tnpscexams.in/www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2024 இப்போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 06.02.2024 அன்று காலை 11 மணியளவில் துவங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வு (TEST) நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விவரத்தினை பதிவு செய்து பயன் பெறலாம்.

இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2-Passport size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும். நமது தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள் 2022 - 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB SI) தேர்வில் 5 நபர்கள், (TNUSRB PC) தேர்வில் 17 நபர்கள் தேர்ச்சிப் பெற்று தற்போது பணியில் உள்ளனர். மேலும் 2023 – 2024 ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 (TNPSC GROUP IV) தேர்வில் 22 நபர்கள், டி.என்.பி.எஸ்.சி குரூப் – 2 (TNPSC GROUP II) முதன்மை தேர்வில் 9 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வாகியுள்ளனர்.

TNUSRB PC தேர்வில் 13 நபர்கள் தேர்ச்சிப் பெற்று உடற்தகுதி தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர். தற்போது வெளிவந்துள்ள TNUSRB SI தேர்வில் 5 நபர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.மேலும் http://tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொளி வழி கற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இவ்விணையதளத்தில் பாடக்குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம், மாதிரி தேர்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இம்மாதிரி தேர்வினை ஆன்லைனில் எழுதலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News