வடமாநில பெண்ணிற்கு பாலியல் தொல்லை - 4 பேர் மீது குண்டர் சட்டம்

Update: 2023-11-23 04:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டத்தில் கடந்த 16.09.2023ம் தேதி வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை தெக்கூரை சேர்ந்த ரஞ்சித், கஜேந்திரன், அருண்குமார், கீழப்பசலையை சேர்ந்த ஆதித்யா ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்குறிப்பிட்ட நான்கு நபர்களும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிவகங்கை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜானகி வேண்டுதலின் பேரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்புதலின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மேற்குறிப்பிட்ட நான்கு நபர்கள் மீதும் தடுப்பு காவல் ஆணை பிறப்பித்து நான்கு நபர்களும் சிவகங்கை கிளைச்சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



Tags:    

Similar News