சோழீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

மல்லசமுத்திரத்தில் உள்ள பழமை வாய்ந்த சோழீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி, தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2024-05-02 17:26 GMT

சிறப்பு பூஜை

மல்லசமுத்திரத்தில் சோழர் காலத்தில் கட்பட்ட பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை சோழீஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் குருபெயர்ச்சி மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, மாலை 4;30க்கு, நடராஜர் அபிசேகமும், 5;30க்கு, குருபெயர்ச்சி சிறப்பு அபிசேகமும், 6;30க்கு, தேய்பிறை அஷ்டமி பூஜையும் நடந்தது. பக்தர்கள் பால், தயிர், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம், கரும்புசாறு, தேங்காய்பழம், மாலை, நவகிரக வஸ்த்ரம், மஞ்சள் மற்றும் சிகப்பு துண்டு உள்ளிட்டவற்றை கோவிலில் சமர்பித்து, தங்களுக்குண்டான பரிகாரங்களை செய்து கொண்டனர்.
Tags:    

Similar News