குட்கா விற்றவர் கைது - கடைக்கு சீல்

விராலிமலை அருகே மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.

Update: 2024-01-07 04:23 GMT
விராலிமலை ஒன்றியம் ஆவூர், மலம்பட்டி, பேராம்பூர், ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மளிகை  பெட்டி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவீன் குமார் அறிவுறுத்தலின் பெயரில் போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விராலிமலை கீரனூர் சாலையில் ஆம்பூர் பட்டி நால் ரோட்டில் பாக்யராஜ் என்பவர் நடத்திய மளிகை கடையில் இருந்து 94 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் இதையடுத்து பாக்கியராஜ்யை கைது செய்து மாத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். கடைக்கு சீல் வைக்கப்பட்டது. அதேபோல் சுரேஸ் என்பவரது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட நான்கு புகையிலை பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News