சிவகாசியில் புகையிலை பறிமுதல்

சிவகாசியில் வெளிமாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட புகையிலை மற்றும் குட்கா கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2024-03-05 10:33 GMT
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா

பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்ட 83 கிலோ குட்கா பறிமுதல்...ஶ்ரீவில்லிபுத்தூரில் 3 பேர் கைது... பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 83 கிலோ குட்காவை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார்,3 பேரை கைது செய்தனர்.

வெளி மாநிலங்களில் இருந்து டிராவல்ஸ் மூலம் குட்கா கடத்தி வரப்பட்டு சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது தனியார் டிராவல்ஸ் பேருந்து மூலம் பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்து, கார் மூலம் கடைகளுக்கு சப்ளை செய்ய சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் முயன்ற போது சோதனையில் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன்(40), இனாம்கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்(23), பெருமாச்சேரியை சேர்ந்த முனியசாமி(29) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 83 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News