குட்கா கடத்தல் - 2 பேர் கைது,

நன்னிலத்தில் காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களது வீடுகளில் நடத்திய சோதனையில் கார் உட்பட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-01-22 03:12 GMT

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா 

நன்னிலம் பகுதியில் நடத்திய தீவிர வாகன சோதனையில் நான்கு சக்கர வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் 45 பண்டல்ஸ், விமல் பான் மசாலா 10 பண்டல்ஸ் வி1 பான் மசாலா 10 பண்டல்ஸ் பொருட்களை கடத்தி வந்த அன்னவாசல் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த வீரசிங்கம் என்பவரின் மகன் இலையரசன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் கிடாமங்கலம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரின் மகன் விக்னேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர் .

மேலும் குற்றவாளிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் 7 கோணிப்பைகள், வி1 பான்மசாலா 7 1/2 கோணி பைகளில் இருந்த மொத்தம் சுமார் 172 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 20 லட்சம்  ஆகும். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்த நன்னிலம் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் தனி பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோரை எஸ். பி பாராட்டினார்.

Tags:    

Similar News