மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை கூட்டம்

ஒரத்தநாடு அருகே மாற்றுத்திறனாளிகள் சங்கம் கிளை அமைப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Update: 2024-02-05 06:07 GMT
மாற்றுத்திறனாளிகள்

தஞ்சை மாவட்டம், திருவோணம் ஒன்றியம், வெட்டுவாக்கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில், திருவோணம் ஒன்றியச் செயலாளர், கோவி.ராதிகா கலந்து கொண்டு நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார்.

தலைவராக சுந்தர்ராஜன், செயலாளராக செல்வி, பொருளாளராக சரவணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உதவித்தொகைக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்தள நடைபாதை, கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News