மாற்றுத்திறனாளிகள் விழா

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் சார்பில் கொடியேற்றுதல் விழா நடைபெற்றது

Update: 2023-12-03 13:28 GMT

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் சார்பில் கொடியேற்றுதல் விழா நடைபெற்றது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ,சங்கப் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் கொடியேற்றுதல் நிகழ்வு பள்ளிபாளையம் வட்டார பகுதி முழுவதும் நடைபெற்றது. ஆவரங்காடு, ஓடப்பள்ளி அக்ரஹாரம் கிளை, காவிரி ஆர் எஸ் கிளை, வெடியரசம்பாளையம் கிளை உள்ளிட்ட பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியின் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் சங்க கொடியேற்றுதல் விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது . இதில் தாலுகா தலைவர் அர்ஜுனன், தாலுகா செயலாளர் அருண்குமார் ,தாலுகா பொருளாளர் கனகவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . சங்க கொடியினை ஏற்றி மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன் சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள் தாலுகா துணை செயலாளர் சரவணன் ,ஓடப்பள்ளி கிளை தலைவர் சுப்பிரமணி மற்றும் மதிமுக நகரச் செயலாளர் ரமேஷ் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மாற்றுத் திறனாளிகள் என பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்....
Tags:    

Similar News