ராஜ அலங்காரத்தில் அனுமன்

சேலம் மாவட்டம், வி.என்பாளையம் தபால் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த அனுமனை பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

Update: 2024-01-12 00:59 GMT

அனுமன் ஜெயந்தி

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சேலம் மாவட்டம் சங்ககிரி, வி.என்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சனேயருக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் தபால் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தபால் ஆஞ்சநேயர் சுவாமியை வழிப்பட்டுச்சென்றனர்.
Tags:    

Similar News