கள்ளக்குறிச்சியில் அனுமன் ஜெயந்தி விழா
கள்ளக்குறிச்சி ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் அனுமனுக்கு வடை மாலை சாற்றி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.;
Update: 2024-01-12 05:00 GMT
அனுமன் ஜெயந்தி
கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அதனையொட்டி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும் தொடர்ந்து தீபாராதனை மற்றும் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர், சுவாமிக்கு வடை மாலை சாற்றப்பட்டது. பூஜைகளை அர்ச்சகர் சங்கர் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.