ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ராவத்தநல்லூரில் உள்ள அனுமன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-12 05:29 GMT

அனுமன் ஜெயந்தி 

சங்கராபுரம் அருகே உள்ள ராவத்தநல்லுார் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து வெற்றிலை, துளசி, வடை, பூ, பழம் உள்ளிட்ட வற்றால் மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News