வெள்ளியணையில் பெண்ணுக்கு தொல்லை: மளிகை கடை உரிமையாளர் கைது

வெள்ளியணையில் மளிகை கடைக்கு சென்ற பெண்ணிடம் தவறாக நடந்த கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-21 13:57 GMT

காவல் நிலையம்

வெள்ளியணையில் மளிகை கடைக்கு சென்ற பெண்ணின் மார்பகத்தை தகாத எண்ணத்தோடு தொட்ட கடைக்காரர் கைது.

கரூர் மாவட்டம், வெள்ளியணை, தேவேந்திர நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி காளியம்மாள் வயது 31. இவர் ஜூன் பதினெட்டாம் தேதி மதியம் 2 மணி அளவில், வெள்ளியணை கடைவீதியில் உள்ள நெல்லை ஸ்டோருக்கு தனது வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.

கடையில் இருந்த வெள்ளியணை, தென்பாகம், சூர்யா நகரை சேர்ந்த எபினேசர் மகன் முத்துராஜா வயது 42 என்பவர், காளியம்மாளிடம் தகாத முறையில் நடந்துள்ளர்.

இதனால் பாதிக்கப்பட்ட காளியம்மாள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக முத்துராஜாவை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News