சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

Update: 2024-06-06 12:31 GMT

சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.


சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை. பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்தில் காணப்பட்ட வந்த நிலையில் இரவு 7 மணி முதல் 11 மணி வரை சூளகிரி,அத்திமுகம், பேரிகை உத்தபப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது
Tags:    

Similar News