குறிஞ்சிப்பாடி பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.;
Update: 2024-05-23 02:34 GMT
மழை
குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையினால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.