நெற்குப்பையில் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி

நெற்குப்பையில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-06-02 01:41 GMT

கனமழை 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நெற்குப்பை, கொன்னத்தான்பட்டி, தெக்கூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும் பெய்த கனமழையால் சாலைகள், கழிவுநீர் பாதைகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி நிலையில் வடிகால் இல்லாத பாதைகளில் மழை நீர் தேங்கியும் உள்ளது. கடந்த பத்து தினங்களாக கடுமையான வெப்பம் வாட்டி வந்த நிலையில் இக்கனழையின் காரணமாக குளிர்ந்த சீதோசன நிலையை பெற்று பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Tags:    

Similar News