கனமழையால் பெரும் போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல்லில் மழை ஓய்ந்த பின் அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2024-05-16 05:25 GMT

போக்குவரத்து நெரிசல் 

திண்டுக்கல் நகரில் நேற்று  சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழையால் ஆங்காங்கே வாகனங்களை ஓரமாக நிறுத்தி வைத்த வாகன ஓட்டிகள் மழை நின்றவுடன் ஒரே நேரத்தில் எல்லோரும் நாகல் நகர் வழியாக வெளியூர்களுக்கு வெளியூரிலிருந்து திண்டுக்கலுக்கும் வாகனங்கள் வந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் உண்டானது.
Tags:    

Similar News