எடப்பாடியில் கனமழை - சாலைகளில் கழிவு நீரோடு மழை நீர் தேங்கியதால் அவதி

Update: 2023-11-03 01:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் அதன் சுற்று பகுதிகளில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் வெளியேற வழி இல்லாமல் சாக்கடையில் கலந்து சாலையில்  தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்வதற்கு பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று இரவு பெய்த கனமழையால் பஸ் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் பூலாம்பட்டி சாலையில் சாக்கடை நீர் கலந்த மழை நீர் தேங்கியுள்ளது.  பள்ளி மாணவிகள்,பொதுமக்கள் நடந்து செல்வதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர் .இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Tags:    

Similar News