வேப்பனப்ஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

வேப்பனப்ஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2024-06-07 15:59 GMT
வெளுத்து வாங்கிய கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேகம் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழை நீர் பெருகெடுத்து ஓடியது.

இப்பகுதியில் தொடர்ந்து கனமழை வருவதால் இப்பகுதியில் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News