கடும் பனிப்பொழிவு: முகப்புவிளக்கை எரியவிட்ட வாகன ஓட்டிகள்

ஓசூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் முகப்புவிளக்கை பயன்படுத்தி, வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்கின்றன.

Update: 2024-01-13 06:26 GMT

ஓசூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் முகப்புவிளக்கை பயன்படுத்தி, வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்கின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது வெள்ளை போர்வை போர்த்தியது போல பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்கள் ஊர்ந்து சென்றது 9 மணி மேல் ஆகியும் தொடர் பணியால் சூரியன் சந்திரனை போல் காட்சியளித்தது.

  காலை பனிமூட்டம் காரணமாக தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் அன்றாட பணிகளை மேற்கொள்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர், பணியின் தாக்கம் காலை தொடர்ந்து நீடித்து வருகிறது ஓசூர் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடர்ந்து பணி பெய்து வருகிறது வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

Tags:    

Similar News