கோட்டூரில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு கோட்டூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2024-02-04 01:59 GMT

அண்ணா நினைவு நாள் 

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு பெருக வாழ்ந்தான் ஊராட்சியில் கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ். ஆர். தேவதாஸ் தலைமையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News