அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

புதுக்கோட்டையில் அண்ணாவின் 55வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில், அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

Update: 2024-02-03 08:28 GMT

புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட கழக செயலாளர், டாக்டர் .சி. விஜயபாஸ்கரின் வழிகாட்டுதலின்படி, புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் வி. ராமசாமி தலைமையில் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகர தெற்கு பகுதி செயலாளர் எஸ் எ எஸ் சேட்டு என்ற அப்துல் ரகுமான் நகர வடக்கு பகுதி செயலாளர் பாஸ்கர் ஆகியோரின் முன்னிலையில் அதிமுகவை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் பட்ட கழக செயலாளர்கள் ன்று என ஏராளமானோர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

Tags:    

Similar News