கனமழையால் வீடு சேதம் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Update: 2023-12-18 02:05 GMT
இடிந்து விழுந்த வீடு 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே நல்லேந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் லோகநாதன் - மீனாட்சி தம்பதியர். இவர்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக இன்று காலை அவரது வீடு இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் கொடுத்தும் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கருணை அடிப்படையில் நிவாரணம் வழங்கி, வீடு கட்டித்தர உத்திரவாதம் வழங்கும்படி தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News