மதுராந்தகம் அருகே தீ விபத்தில் வீடுகள் எரிந்து சேதம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புதிய பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் தீ விபத்தில் குடிசை வீடுகள் எரிந்து நாசமாகியது.

Update: 2024-02-02 16:30 GMT
சேதமடைந்த குடிசை வீடு

செங்கல்பட்டு மாவட்டம்,,மதுராந்தகம் அடுத்த எல் . எண்டத்தூர் ஊராட்சியில் புதிய பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் இன்று பகல் 1.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் துர்கா மற்றும் விஜயலட்சுமி  ஆகியோரது குடிசை வீடுகள் எரிந்து விட்டன.. இதனை அறிந்து அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Tags:    

Similar News