அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

இராமராதபுரம் மாவட்ட அதிமுக கழக செயலாளர் முனியசாமி ஆலோசனையின் பேரில் அதிமுக சார்பில் தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி வருங்கால சந்ததியினரை சீரழித்து வருவதை கண்டித்து மண்டபம் பேருந்து நிறுத்தம் அருகே மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

Update: 2024-03-12 18:49 GMT

மனித சங்கிலி போராட்டம்

இராமராதபுரம் மாவட்ட அதிமுக கழக செயலாளர் முனியசாமி ஆலோசனையின் பேரில் அதிமுக சார்பில் தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி வருங்கால சந்ததியினரை சீரழித்து வருவதை கண்டித்து மண்டபம் பேருந்து நிறுத்தம் அருகே மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அதிமுக., மாவட்ட கழக மாணவரணி துணை செயலாளர் செந்தில் குமார் தலைமை வகித்தார். அதிமுக., மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்து வருவதால் இளைஞர்களின் செயல்பாடு மாறி வருகிறது. அவர்களை தடுக்காத விடியா திமுக., அரசை கண்டித்து கண்டன கோஷங்களை தலைமை கழக பேச்சாளர் மா.மைதீன் கூற கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் அதிமுக., மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர். இளையராஜா நன்றி கூறினார். இந்நிகழ்வில் ஏராளமான அதிமுக., மாவட்ட, நகர், கிளை கழகத்தினர் கலந்து கொண்டு மண்டபம் பேருந்து நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வரை மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றனர்.
Tags:    

Similar News