கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமை:மனைவி தற்கொலை
கண்ணமங்கலம் அருகே கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், பெண் தற்கொலை செய்து கொண்டார்.
By : King 24X7 News (B)
Update: 2023-11-21 13:06 GMT
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி இவரது மனைவி செல்வி (45). வீராசாமி அடிக்கடி குடிபோதையில் வீட்டில் வந்து தகராறு செய்தார். இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி செல்வி தனது வீட்டில் பேன் கொக்கியில் புடவையில் தனக்குத்தானே தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதனை கண்ட பிரகாஷ், செல்வியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வி உயிரிழந்தார். இது சம்பந்தமாக பிரகாஷ் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தரணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.