இருசக்கர வாகன விபத்தில் கணவன், மனைவி காயம்

திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், கணவன் மனைவி இருவரும் காயமடைந்தனர்.

Update: 2024-02-29 03:20 GMT

பைல் படம்

திருச்சி திருவெறும்பூர் எழில் நகர் குறிஞ்சித் தெருவை சேர்ந்தவர் வெங்கட கணேசன்இவரது மனைவி தீக்ஷனா. கணவன் மனைவி இருவரும் தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை காட்டூர் அருகே பாரதிபுரம் குறுக்கு சாலை எதிரே தங்களை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர் அப்போது அதே திசையில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிதில் நிலைத்தடுமாறி வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் இருவரும் கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கட கணேசன் துவாக்குடி அரசு மருத்துவமனையிலும் தீக்ஷனா திருச்சி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து காயம் அடைந்த வெங்கடேசன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில் போலீசார் நடத்தி விசாரணையில் நடத்தியதில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர் துவாக்குடி வாழவந்தான் கோட்டை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த சூசை ராஜ் என்பது தெரிய வந்தது இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News