குடும்பத் தகராறில் இளம் மனைவியை தாக்கிய இளைஞர் கைது

குடும்பத் தகராறில் இளம் மனைவியை தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-10 17:58 GMT

கைது

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, எல்லமேடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் தினேஷ் குமார் வயது 28. இவரது மனைவி கௌசல்யா வயது 25. இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று, இவர்களுக்கு 5- மாத குழந்தை ஒன்று உள்ளது.

இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத்தகராறில், இருவரும் கடந்த 45 நாட்களாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மே 2-ம் தேதி மதியம் 2 மணி அளவில், சின்ன தாராபுரம் அருகே சின்னபுளியம்பட்டி பகுதியில் உள்ள கௌசல்யாவின் வீட்டிற்கு சென்று உள்ளார் தினேஷ் குமார்.

அப்போது, தன்னிச்சையாக சென்று மனைவி கௌசல்யாவிடம் தகாத வார்த்தை பேசி, குச்சியால் தாக்கி,கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் உள் காயம் அடைந்த கௌசல்யா, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் மறுநாள் மே 3ம் தேதி சம்பவ இடத்துக்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் முடிவில், நேற்று தினேஷ் குமாரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.

Tags:    

Similar News