காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை
தூத்துக்குடியில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-04-05 01:26 GMT
தற்கொலை
தூத்துக்குடியில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் சந்தானம் (28), வெல்டிங் வேலை செய்கிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறில் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த சந்தானம் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.