கணவன் - மனைவி தகராறு வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை !
கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-21 05:34 GMT
தற்கொலை
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள ஹரிகேசவநல்லூர் பாறையடி காலனியை சேர்ந்தவர் மந்திர மூர்த்தி. இவர் சேரன்மகாதேவியில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வெங்கடேஸ்வரியும் வழக்கறிஞர் ஆவார். நேற்று கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மந்திரமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.