தமிழகத்தை விட்டு வெளியே சென்றால் திமுக தலைவர்களை யாருக்கும் தெரியாது

திமுகவில் உள்ள தலைவர்கள் தமிழகத்தை விட்டு வெளியில் சென்றால் யார் என்று கூட தெரியாது, உலக நாடுகளில் சிலை வைத்து போற்றப்படும் ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் தான் என கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.

Update: 2024-01-28 03:07 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தலில் எம் ஜி ஆர் திடலில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் -ன் 107 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருத்தினராக அம்மா நாளிதழ் ஆசிரியர் கல்யாண சுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இவர் பேசுகையில் கருணாநிதி மற்றும் திமுகவில் உள்ள தலைவர்கள் தமிழகத்தை விட்டு வெளியில் சென்றால் இவர்களை யார் என்று கூட தெரியாது. ஆனால் உலக நாடுகள் பலவற்றில் 100 ஆண்டுகள் கடந்தும் கூட சிலை வைத்து போற்றப்படும் ஒரே தலைவர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் ஒருவரே என்று புகழாரம் சூட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பல்வேறு அதிமுக நிர்வாகிகள் பேசினர். சாத்தூர் நகர செயலாளர் இளங்கோ மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். சாத்தூர் நகர, ஒன்றியம் வெம்பக்கோட்டை கிழக்கு, மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News