உங்ககிட்ட துப்பாக்கி இருக்கா உடனே ஒப்படைங்க: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் தங்கள் பொறுப்பில் வைத்திருக்கும் உரிமைதாரர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களிலோ துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்.

Update: 2024-03-17 12:28 GMT

கோப்பு படம் 

நாமக்கல் மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்போர் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் லோக்சபா தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு நாமக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2024 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், ஏற்கனவே தங்களது சுய பாதுகாப்பிற்காக தக்க உரிமம் பெற்று தங்களின்,

பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்து விதமான துப்பாக்கிகள் மற்றும் அதன் இதர பொருட்களையும் அங்கீகரிக்கப்பட்ட ஆயுதகிடங்குகள் அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு, அதன்படி, குறிப்பிட்ட அளவிலான துப்பாக்கிகள் மட்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் தங்கள் பொறுப்பில் வைத்திருக்கும் உரிமைதாரர்கள் மற்றும் உரிமம் காலாவதியாகி புதுப்பிக்க தவறியவர்களும் உடனடியாக அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற ஆயுதகிடங்குகளிலோ அல்லது காவல் நிலையங்களிலோ துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு,

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ச.உமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News