சட்டவிரோத சேவல் சண்டை - 3 பேர் கைது

.வடுகப்பட்டி அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-19 01:31 GMT

பைல் படம் 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, வடுகப்பட்டி பகுதியில் சேவல் சண்டை நடத்துவதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வடுகப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சேவல் சண்டையில் ஈடுபட்ட அரவக்குறிச்சி தாலுக்கா, கீழ்பாகம் மொடக்கூர் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்த செல்வராஜ், இனங்கனூர், சரளப்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், அரவக்குறிச்சி புது தெருவை சேர்ந்த ஜெகதீஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News