க.பரமத்தி அருகே சட்டவிரோத சேவல் சண்டை: ஐந்து பேர் கைது

க.பரமத்தி அருகே சட்டவிரோத சேவல் சண்டையில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-01-18 12:41 GMT
சேவல் சண்டை

 கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட, பெருமாபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்துவதாக, காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார்க்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜனவரி 17ஆம் தேதி மாலை 5 மணி அளவில், பெருமாள் பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, ஆலம்பாளையம் சாலையில் உள்ள எஸ் கே பி கிரசர் பின்பகுதியில் சேவல் சண்டை நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சேவல் சண்டையில் ஈடுபட்ட க. பரமத்தி முன்னூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம்,

அருகில் உள்ள சாலை தோட்டம் பகுதியை சேர்ந்த சிவகுமார், அத்திப்பாளையத்தைச் சேர்ந்த ராஜன், ஈரோடு மாவட்டம் முத்தூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், குப்பம் பகுதியை சேர்ந்த பழனிசாமி ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.

சேவல் சண்டைக்கு பயன்படுத்திய மூன்று சேவல்களை பறிமுதல் செய்தனர். ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவித்தனர் க.பரமத்தி காவல்துறையினர்.

Tags:    

Similar News