சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது
தேனி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது.
Update: 2024-01-29 06:59 GMT
தேனி மாவட்டம் குமுளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லோயர் டெம்பிள் பகுதியில் மனமகில் மன்றம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து குமிழி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கதிரேசன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கேரளாவை சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.