மதுபாட்டில்கள் விற்பனை - ஒருவர் கைது

விழுப்புரம் மாவட்டம்,டி.புதுப்பாக்கம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை‌ செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-02-05 07:16 GMT

மது விற்றவர் கைது


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள டி.புதுப்பாக்கம் கிராமத்தில் அன்னிய மாநில மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக பிரம்மதேசம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இந்த தகவலின் பெயரில் பிரம்மதேசம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மூர்த்தி தலைமையிலான போலீசார் டி.புதுப்பாக்கம் கிராமத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது டி.புதுப்பாக்கம் கிராம மரக்காணம் மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் முனியாண்டி என்பவரது மகன் வேல்முருகன் வயது 41 என்பவர் 180 எம்.எல் அளவு கொண்ட அந்நிய மாநில மதுபாட்டில்கள் 50 மற்றும் 5 லிட்டர் விஷ நெடியுள்ள சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News