திண்டுக்கல்லில் வரத்து குறைந்ததால் விலை உயர்வு

திண்டுக்கல் உழவர் சந்தையில் தக்காளி, பீன்ஸ் வரத்து குறைந்ததால் விற்பனை விலை உச்சத்தை தொட்டுள்ளது.

Update: 2024-05-26 16:05 GMT

தக்காளி

திண்டுக்கல் என் ஜி ஓ காலனியில் உள்ள உழவர் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 34 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 55 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 100 ரூபாய்க்கும், பீட்ரூட் 66 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், ஒரு கிலோ கேரட் 70 ரூபாய்க்கும்,

முட்டைக்கோஸ் 40 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் 160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாட்கள் முன்பு வரை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டு வந்த தக்காளி, உழவர் சந்தையில் 46 ரூபாய்க்கும் சில்லறை விற்பனை கடைகளில் 50 முதல் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. திடீர் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக வரத்து குறைவால் ஒரு கிலோ பீன்ஸ் 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News