தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீவிர தேர்தல் பணி ஆற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது !!

குமாரபாளையத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் பணி ஆற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

Update: 2024-02-26 11:08 GMT

தேமுதிக நிர்வாகிகள்

பள்ளிபாளையம் நகர தேமுதிக சார்பில், ஆவரங்காடு பகுதியில் வார்டு செயலாளர்கள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேமுதிக நகரச் செயலாளர் வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார் . இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் . இதில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்தும் ,பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் பல்வேறு விவரங்கள் பேசப்பட்டது. மேலும் தேமுதிக மாநில தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு, தேமுதிக தலைமை அறிவிக்கும் பாராளுமன்ற வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பணி ஆற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. வர்த்தக அணி செயலாளர் சுரேஷ், நகர அவைத்தலைவர் ஆகாஷ் குமார், துணை செயலாளர் சாந்தி, நாகராஜ் ,,கோபி, சரவணன், வார்டு செயலாளர்கள் சக்திவேல் ,முருகன் ,நாகராஜ்,குமார், தர்மன் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News