கலசப்பாக்கம் அருகே அம்மா குடிநீர் பந்தல் திறப்பு!

அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கோடை வெப்பத்தை பொதுமக்கள் தணிக்க அம்மா குடிநீர் பந்தலை திறந்து வைத்தார் .

Update: 2024-04-26 04:19 GMT

குடிநீர் பந்தல்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கோடை வெப்பத்தை பொதுமக்கள் தணிக்க அம்மா குடிநீர் பந்தலை திறந்து வைத்தார்.

பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மோர், பல்வேறு வகையான பழவகை மற்றும் குளிர்பானம் வழங்கினார்.

இதில் நாடாளுமன்ற வேட்பாளர் கலியபெருமாள், நகர செயலாளர் வழக்கறிஞர் ராதா, ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News