அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா:அமைச்சர் பங்கேற்பு

செங்கல்பட்டு சீதாபுரம் ஊராட்சியில், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.11.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-02-02 12:50 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், சீதாபுரம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 11.97 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ், மாவட்ட கவுன்சிலர் வசந்தா, ஊராட்சி மன்ற தலைவர் தேசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை காணொளி மூலம் திறந்து வைத்தார்.

Similar News