வளர்ச்சிப் பணிகள் தொடக்க விழா

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் வளர்ச்சிப்பணிகள் தொடக்க விழா நடந்தது.

Update: 2024-03-17 07:10 GMT

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் வளர்ச்சிப்பணிகள் தொடக்க விழா நடந்தது. 

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சியில் 2 கோடி மதிப்பிலான திட்ட பணிகளின் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக 87 லட்சம் மதிப்பீட்டில் அம்பாசமுத்திரம் கல்லிடையை இணைக்கும் பழைய தாமிரபரணி பாலம் சீரமைக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

இதனை கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மன்ற தலைவி பார்வதி இசக்கி பாண்டியன் திறந்து வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News