தேர்தல் அலுவலக கட்டிட திறப்பு விழா: அமைச்சர், எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

கூடுவாஞ்சேரி தேர்தல் அலுவலக கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர், எம்பி, எம்எல்ஏ பங்கேற்றனர்.

Update: 2024-03-24 16:03 GMT
அலுவலகம் திறப்பு

காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் க.செல்வம் அவர்களின் கழக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலகம் திறப்புவிழா இன்று(24.3.2024) நடைபெற்றது..

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நகர மன்ற தலைவர் எம். கே. டி .கார்த்திக் தண்டபாணி,நகர மன்ற துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள்,

திமுக நிர்வாகிகள் ,மூத்த முன்னோடிகள்,வார்டு செயலாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, அனைத்து கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News