மலையனூர் திண்ணைப் பிரச்சாரம் தொடங்கி வைப்பு

கடலூர் மாவட்டம்,மலையனூரில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற திண்ணை பிரச்சாரம் துவக்கி வைக்கப்பட்டது.

Update: 2024-02-26 10:08 GMT

திண்ணை பிரச்சாரம்

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கினங்க கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் தெற்கு ஒன்றியம் மலையனூரில் "இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்" திண்ணைப் பிரச்சாரத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் இன்று தொடங்கி வைத்தார்.

உடன் தொகுதி பார்வையாளர் செந்தமிழ் செல்வன் , மங்களூர் திராவிட முன்னேற்றக் ஒன்றிய கழக செயலாளர்கள் பா. செங்குட்டுவன், பட்டூர் வீர. அமிர்தலிங்கம், மங்களூர் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய குழு பெருந்தலைவர் கே. என். டி. சங்கர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News