பரங்கிப்பேட்டையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
பரங்கிப்பேட்டையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-27 15:58 GMT
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் ஏழை, எளிய மக்களின் பயன்பாட்டிற்காக கோடைகால தண்ணீர் பந்தலை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.