ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா!

ஆரணி சிஎஸ்ஐ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-03-29 10:52 GMT

ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சிஎஸ்ஐ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. ஸ்மார்ட் வகுப்பறையை வேலூர் பேராயர் ஷர்மா நித்யானந்தம் கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான விளையாட்டு சாதனங்கள், இசைக் கருவிகள், புத்தகங்கள் ஆகியவற்றை வேலூர் டாக்டர் செல்வகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News