தண்ணீர் பந்தல் திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், சரவம்பாக்கம் பகுதியில் அதிமுக சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது.

Update: 2024-05-03 07:41 GMT
சரவம்பாக்கம் :தண்ணீர் பந்தல் திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தெற்கு ஒன்றியம்,சரவம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.கார்த்திகேயன் ஏற்பாட்டில், நீர்மோர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கழக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல்,செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருகழுக்குன்றம் S.ஆறுமுகம், மதுராந்தகம் ஒன்றிய குழு உறுப்பினர் K.கீதா கார்த்திகேயன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணிபழம், வெள்ளரிக்காய் போன்றவற்றை வழங்கி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வின் போது,ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News