தண்ணீர் பந்தல் திறப்பு விழா: எம்பி பங்கேற்பு

திருத்தேரியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் எம்பி கலந்து கொண்டார்.

Update: 2024-05-10 14:57 GMT
தண்ணீர் பந்தல் திறப்பு விழா, நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு

காட்டாங்குளத்தூர் அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி உள்ள திருத்தேரியில் இன்று காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களின் ஆலோசனையின் பேரில், பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் இளநீர், தர்பூசணி பழம்,

குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ,ஒன்றிய கவுன்சிலர்கள் ,

தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள்,இளைஞர் அணி மாணவர் அணி மற்றும் திமுக நிர்வாகிகள் ,ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News