புலிகள் கணக்கெடுப்பு பணி அறிவித்த துணை இயக்குனர்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவதால் பிப்ரவரி 20 முதல் 27 வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கவிக்கப்படுள்ளது.

Update: 2024-02-18 05:19 GMT

புலிகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்டத்தில் வருகின்ற பிப்ரவரி 20 முதல் 27ஆம் தேதிவரை புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறவுள்ளதால் மாஞ்சோலை, காரையாறு பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது, என அம்பாசமுத்திரம் வன கோட்ட துணை இயக்குநர் இளையராஜா தெரிவித்துள்ளார். இதற்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு கொடுக்கும் படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Tags:    

Similar News