மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-20 08:23 GMT

மாநகராட்சி ஆணையர்

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து இந்த ஆய்வை மேற்கொண்டார். மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடு பாதுகாப்பு வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்பொழுது அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News