அரசு மேல்நிலை பள்ளியில் கட்டிட பணிகள் ஆய்வு

Update: 2023-12-21 06:03 GMT

ஆய்வு 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.63 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெயக்குமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர். அப்போது அனந்தபுரம் பேரூராட்சி தலைவர் முருகன், அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், ஒன்றிய அவை தலைவர் வாசு, ஒப்பந்ததாரர் ரசூல் உள்பட பலர் உடனிருந்தனர்.




Tags:    

Similar News