வாக்குச்சாவடி மையங்களில் வட்டாட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-22 06:26 GMT

வட்டாட்சியர் ஆய்வு 

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 306 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில், ஆக்கூர், பண்டாரவடை ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை நேற்று தாசில்தார் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், கழிப்பிடம், மின்சார வசதி மற்றும் கட்டுமானங்களை பார்வையிட்டார். ஆய்வின்போது தேர்தல் துணை தாசில்தார் பாபு, கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் குமார், பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News